இடுகைகள்

டிசம்பர், 2025 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

கண்கள் சொல்லும் கதைகள்! கதை 8

  கண்கள் சொல்லும் கதைகள்! கதை 8   மாதவியின் முன் அமர்ந்து இருந்தார் தமிழரசி.   ராவணனும் அங்கே தான் நின்று இருந்தான்.   "என்னனு சொல்லுமா? ஏதாவது சொன்னா தானே நாங்க ஏதாவது பண்ண முடியும்" என்று அவர் கேட்க, ராவணனோ அங்கே மாதவியை தான் பார்த்து கொண்டு இருந்தான்.   அவனது அன்னை தான், "நம்ப அந்த பொண்ணு மாதவி கிட்ட பேசணும் டா... அந்த பொண்ணு ஏதாவது கேஸ் கொடுத்தா நீ தான் எடுக்கணும்" என்று விரலை நீட்டி சொல்ல, அவனின் கண்கள் விரிந்தன.   "அம்மா... நடக்குறதா பேசுங்க... அந்த பொண்ணுக்கு பிரச்சனைன்னு எனக்கு என்னைக்கோ தெரியும். ஆனா அவ வாயே திறக்க மாட்டா... நானும் ஒரு நாள் கேட்டு பார்த்தேன். வேஸ்ட் ஆவ் டைம்" என்று சலிப்பாக சொல்லி இருந்தான்.   "டேய் அவளுக்காக இல்லனாலும் அந்த மூணு வயசு குழந்தைக்காக டா... அவளை நினைச்சி பாரு" என்று சொல்லவும், மூச்சை இழுத்து விட்டவன், "சரி வாங்க போய் பேசுவோம்... எப்படியா இருந்தாலும் அவ வாய திறக்க மாட்டா.. உங்க ஆசைய எதுக்கு கெடுக்கணும்" என்று சொன்னவன், அவருடன் மாதவியின் வீட்டிற்கு சென்று இருந்தார்.   இதோ இப்பொது அமர்ந்தும் இருந்தார...

கண்கள் சொல்லும் கதைகள்! கதை 7

  கண்கள் சொல்லும் கதைகள்! கதை 7   "நிலா" என்று ஓடி வந்து இருந்தான் எட்டு வயது ராவணன்.   "அண்ணா" என்று பள்ளியில் இருந்து வரும் அண்ணாவை நோக்கி, அவளின் பிஞ்சு கால்களில் இந்த பூமிக்கும் வலி எடுக்காமல் ஓடி கொண்டு வந்து இருந்தாள்.   அவளுக்கு அன்னையை விட அண்ணா தான் உயிர்.   அவர்களின் அன்னை தமிழரசிக்கு வயலில் வேலை பார்ப்பவர்களுக்கு உதவி செய்து கொண்டு, அவர்களுக்கு தினக்கூலி வழங்கி விட்டு வருவதற்கே நேரம் சரியாக இருக்கும். பெரிய பண்ணை குடும்பம் அவர்களுடையது. அந்த ஊரிலேயே பணம் மட்டும் அல்ல, பதவியிலும் உயர்ந்து நிற்கும் குடும்பம்.   தமிழரசியின் கணவன் காசி தான் அந்த ஊரின் எம்எல்ஏ. உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இந்த சொத்து அத்தனையும் தமிழரசியுடையது தான்.   அவர்களுக்காக கணக்கு எழுத வந்த காசியை காதலித்து திருமணமும் செய்து கொண்டார். அவரது இனத்தை சேர்ந்தவர் என்பதால் தமிழரசியின் பெற்றோர்களிடம் இருந்து பெரிதாக எந்த வித எதிர்ப்பும் வர வில்லை. அதுவும் வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்க ஒப்புக்கொண்டு இருந்தார்.   அவர்கள் வாழ்ந்த வாழ்க்கைக்கு இதோ சான்றாக இரண்டு பிள்ளைகள். மு...