இப்பிறவியிலாவது உனை சேர்வேனோ! பிறவி 13
இப்பிறவியிலாவது உனை சேர்வேனோ! பிறவி 13 இருவரும் தண்ணீர் குடித்து கொண்டு இருந்தனர். "என்ன மா தம்பிக்கு தண்ணி கொடுத்தியா?" என்று அவளின் தந்தை மணி கேட்கவும், தண்ணீரை முழுதாக குடித்து முடித்தவள்,"ஹான் கொடுத்துட்டேன் ப்பா" என்று சொல்லிக்கொண்டே அபராஜித்தை முறைத்தாள். அவனோ அதை எல்லாம் அசட்டை செய்து, "அங்கிள் உங்க பொண்ணுக்கு பையன் பார்க்க ஏதாவது ஹெல்ப் வேணும்னா கேளுங்க செய்யுறேன்" என்று வேறு சொல்ல, ரிதேஷோ, "அபி ப்ரோக்கு தைரியம் தான்" என்று அகரனின் செவிகளில் சொல்ல, அதர்வ் மனதிற்குள்ளோ, 'இவன் எதுக்கு இவளோ நல்லவன் மாதிரி நடிக்குறான்?' என்று நினைத்து கொண்டு இருந்தான். "சரி மாமா நாங்க அப்போ கிளம்புறோம்... அப்பா இன்னும் இரண்டு நாள்ல பஞ்சாயத்துன்னு சொன்னார். வஞ்சி சித்தியை ஒரு வழி ஆக்குறேன்னு அம்மா சொல்லிக்கிட்டு இருக்காங்க" என்றும் சொல்லி விட்டு தான் சென்று இருந்தான். அவர்கள் சென்ற பிறகு, மணியும் கூட, "அந்த பையன் சரியா தான் சொல்லி இருக்கான் சுப்பு... உனக்கு மாப்பிள்ளை இருக்கலாம்னு இருக்கேன்" என்றதும், "சரி அப்புறம்?...