இடுகைகள்

இப்பிறவியிலாவது உனை சேர்வேனோ! பிறவி 6

  இப்பிறவியிலாவது உனை சேர்வேனோ! பிறவி 6   மீட்டிங்கிற்கு அனைவரும் வந்து இருந்தார்கள். அவர்களுக்காக தேனீர் மற்றும் கொஞ்சம் பழங்களும் வைக்க பட்டு இருந்தன.   அவர்களின் பயிற்சியாளர் சுக்கிரீவன் தான் பேச துவங்கினார்.   "இது தான் நான் ட்ரெயின் பண்ண பெஸ்ட் அண்ட் வர்ஸ்ட் டீம்" என்றவர் சொல்லவும், யாரும் எதுவும் சொல்லவில்லை.   அவர் ஏன் அப்படி சொல்லுகிறார் என்று தான் அனைவருக்கும் தெரியுமே!   "உங்களுக்குள்ள பிரச்சனைனா அதை ட்ரெஸ்ஸிங் ரூம் வரைக்கும் வச்சிக்கோங்க... இப்படி கிரௌண்ட் வரைக்கும் கொண்டு போகாதீங்க... அங்கையோட நின்னா கூட சரி பாக்குற இடம் எல்லாம் சண்டை போட்டு மானத்தை வாங்குறீங்க" என்று அவர் காட்டமாக சொல்லவும், அனைவரும் ஒரு சேர அதர்வ் மற்றும் அபராஜித்தை தான் பார்த்தார்கள்.   அணியின் கேப்டனும் துணை கேப்டனும் அடித்து கொண்டதுதான் இப்பொது வரை தலைப்பு செய்தி!   அதர்வ் அபாரஜித்தை பார்வையால் எரிக்க, அவனோ அதர்வ்வை பார்வையால் பொசுக்கி இருந்தான்.   இருவரும் ஒருவருக்கு ஒருவர் சளைத்தவர்கள் இல்லை. இந்திய அணியின் தலைமை பொறுப்பிற்கு இருவரில் யாரு என்று தேர்வு செய்...

கண்கள் சொல்லும் கதைகள்! கதை 28

  கண்கள் சொல்லும் கதைகள்! கதை 28   பேராசியர் இங்கு வருவார் என்று மாதவியும் எதிர் பார்க்கவில்லை.   "சார் நீங்க இங்க?" என்று மாதவி தயங்கி நிற்கும் போதே, "உன்னோட அம்மா இல்லையாமா?" என்று கேட்கும் போதே அங்கே தமிழரசியும் கனகாவும் வந்தார்கள்.   "இவரு?" என்று கனகா கேட்டு முடிக்கும் முதல், "என்னோட ப்ரொபஸர் அம்மா" என்று இருந்தாள்.   "வாங்க சார்... காபி டீ?" என்று கேட்கவும், "இல்ல இல்ல எனக்கு ஒரு முக்கியமான விஷயம் பேசணும் அதான் வந்தேன். மாதவியை பத்தி எனக்கு எல்லாமே தெரியும். என் மகனுக்கு உங்க பொண்ணை கொடுப்பீங்களானு கேட்க தான் வந்தேன். நீங்க சரின்னு சொன்னா நான் காபி என்ன விருந்தே சாப்பிட்டுட்டு போறேன்" என்று வந்த விடயத்தை போட்டு உடைத்து இருந்தார்.   தமிழரசியின் கண்கள் மட்டும் அல்ல கனகாவின் கண்களும் விரிந்தன. மாதவிக்கோ அப்பட்டமான அதிர்ச்சி.   "அவளுக்கு வெறும் இருபத்தி நாலு வயசு தான் ஆகுது வாழ வேண்டிய பொண்ணு.. நல்ல பொண்ணும் கூட... என் மகன் உங்க பொண்ணை நிலாவோட கடை வீதில பார்த்து இருக்கான். அவனுக்கு ரொம்ப பிடிச்சி போச்சு... எனக்கு மனைவி...

கண்கள் சொல்லும் கதைகள்! கதை 27

  கண்கள் சொல்லும் கதைகள்! கதை 27   ராவணனிடம் இருந்து அழைப்பை ஏற்றவள், "சொல்லுங்க" என்றதும், "அது மாதவி... குணவாளனுக்கு தண்டனை நிறைவேத்திட்டாங்க... அதை கேட்டு அலமேலுவோம் ஹார்ட் அட்டாக்ல ஆன் ஸ்பாட்ல இறந்துட்டாங்க... அவங்களை என்ன பண்றது?" என்று கேட்டு இருந்தான். அவளிடம் மௌனம் தான்.   சிறிது நேரம் பொறுத்து பார்த்தவன், அவனே, "மாதவி உங்கிட்ட தான் சொல்றேன்" என்று அவன் கேட்க, "நான் என்ன சொல்லணும்? எனக்கு எதுவும் தோணல" என்பதுடன் நிறுத்தி கொண்டாள்.   "அவங்க முகத்தை.." என்று ஆரம்பிக்கும் போதே, "எனக்கு அவங்க யாருமே தெரியாது... அதனால கடைசியாவும் எனக்கு அவங்க முகத்தை பார்க்க விரும்பல" என்று சொல்லி வைத்து விட்டாள். அவளுக்கு அவர்கள் இறந்து விட்டார்கள் என்கிற கரிசனை கூட வரவில்லை.   அவளை கொஞ்சம் ஈவு இரக்கம் பார்த்து நடத்தி இருந்தால் கூட, "ஐயோ பாவம்" என்று நினைத்து இருப்பாளோ என்னவோ, ஆனால் இறுதி வரை அதுவும் வழக்காடு மன்றத்தில் கூட அவளை பற்றி இழிவாக பேசியவர்களுக்கு அவள் ஏன் பாவம் பார்க்க வேண்டும்?   அவளிடம் எந்த மாற்றமும் இல்லை. ஏன் பூ ...